குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாகத் தவறான தகவல்களைச் சமூக வலைத்தளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக காவல்துறை 

0 2896

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாகத் தவறான தகவல்களைச் சமூக வலைத்தளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகக் காவல்துறை எச்சரித்துள்ளது.

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாகச் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பரவி வரும் நிலையில், தவறான தகவல்களைப் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகக் காவல்துறை எச்சரித்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்துக்களைத் தெரிவித்த ஷிபின் என்கிற இளைஞரைக் கன்னியாகுமரி மாவட்டக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments